Tuesday, July 29, 2008

ஆலய முற்றம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் சில ஆழமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். "திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்துவிடாதே திறமை இருக்கு மறந்துவிடாதே," என திறமையை வளர்ப்பதற்கான கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார். எனவே திறமையை பொறுத்து கல்வி இருக்ககூடாது. மாறாக திறமைக்கான கல்வியை கொடுக்க வேண்டும்.
மற்றுமொரு பாடலில்இருகிரதெல்லாம் பொதுவாய் போனால் பதுக்கிற வெளியும் இருக்காது ஒதுக்குற வேலையும் இருக்காது ." என பகிர்வு முறையாக இருந்தால் இட ஒதுக்கீடுக்கு இடமேயில்லை. ஆனால் சிலர் மட்டும் தேவைக்கும் அதிகமான பணத்தையும், பொருளையும் தங்களுக்கு மட்டும் என பதுக்கி வைப்பதால் இட ஒதுக்கீடு என ஒன்று நிச்சயம் தேவைப்படும். கல்வி பற்றியும், சொத்துப் பகிர்வு பற்றியும் இத்தகைய முழுமையான மாற்றத்திற்கு யாரும் தயராக இல்லை என்பதே உண்மை. திருச்சபையும் இதற்க்கு விதி விலக்கல்ல. அடிப்படையிலேயே சமத்துவம் நிறைந்த சமுகத்தை படையதால் மட்டுமே நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

சகாயராஜ்
சேலம்

No comments: