Wednesday, July 30, 2008

ஆலயமுற்றம்

இட ஒதுக்கீடு பெறுபவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு பெறாதவர்கள் அதிகம் அவதியுறுகிறார்கள் என்ற கருத்து சிலரிடையே இருந்து வருகிறது. இது தவறு. ஏனேன்றால் உண்மையில் அவதியுர்ம் அனைவருக்கும் இடஒதுகீடு அவரவர் தேவைக்கேற்ப வழங்கப்பட்டுள்ளது. நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. அதே நேரத்தில் இட ஒதுக்கீடு பெறத் தகிதியுடையவர்களிடைஎயும் சிலர் போதிய பணம் படைத்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு அத்தகைய ஒதுக்கீடு தேவையில்லை. அவ்வாறே இட ஒதுக்கீட்டுக்கு தகுதியற்றவர்களாக இருப்பினும் போதிய அடிப்படை வசதிகளும் வாபுகளும் இல்லாதவர்க்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அப்போதுதான் உண்மையான மாற்றம் மக்களிடையே வரும். பணமும் பொருளும் இருப்பவர்கள் பலர் இச்சலுகைகளை பயன்படுத்தி முன்னேறுவதை கண்கூடாகப் பார்க்கிறோம். அத்தகைய மக்களுக்கும் பொறுப்பற்ற தனத்தால் முன்னேறாமல் கிடக்கும் மக்களுக்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும். நாம் நமக்கென வகுக்கும் சட்டங்களையும் திருத்தி பின்பற்றுகிற மனப்பக்குவம் நமக்கு வரவேண்டும். இந்தக் கூற்று இட ஒதுகீட்டிற்கு மட்டுமல்ல மாறாக சமுகத்தின் பிற எல்லா சட்டவகைகளுக்கும் பொருந்தும். வெறுமெனே சட்டத்தை சட்டத்துக்காக பின்பற்றுவது கறிக்குதவாத ஏட்டுசுரக்க்காயதான்.

பால்ராஜ்
திருச்சி

No comments: