Wednesday, July 30, 2008

வத்திகான் செய்திகள்

மீண்டும் தோண்டியெடுக்கப்படும் கர்தினால் நியூமன்னுடைய உடல்
பக்தர்களுடைய வழிபாட்டை எளிதாக்குவதற்க்காக வணக்கத்திற்குரிய ஹென்றி நியூமன்னுடைய உடலை மீண்டும் தோண்டிஎடுக்குமாறு இங்கிலாந்து திருச்சபைக்கு வத்திகான் வேண்டுகோள் விடுத்துள்ளது. இங்கிலாந்து திருச்சபையிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் மனமாறிய ஹென்றி நியூமன்னுடைய அருளாளர் பட்டம் அருகில் வரவிருப்பதால் இதற்கு திருச்சபை ஏற்பாடு செய்துள்ளது. நியூமன்னுடைய உடல் ரேட்னால் என்ற இடத்தில் 1890 - இல் புதைக்கப்பட்டது. தி டெலிகிராப் கொடுத்த தகவலின்படி, ஹென்றி நியூமன்னுடைய உடல் பர்மிங்ஹாம் ஆரட்டரியிலுள்ள அழகிய பளிங்கு கற்களால் ஆனகட்டிடத்தில் வைக்கப்போவதாக கூறப்படுகிறது. தனது மனமாற்றத்திற்கு பிறகு, பர்மிங்ஹாம் ஆரட்டரியை நிறுவினார். அவருடைய இறுதி ஊர்வலத்தில் ஏறத்தாழ பதினைந்தாயிரம் பேர் கலந்து கொண்டனர்.

உலக இளையோர் தின திருப்பலி
ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத கூட்டம்
உலக இளையோர் தின விழாவின் (15 - 20 ) இறுதி திருப்பலியானது, எண்ணிலடங்கா குறிப்பிடத்தக்க சிறப்புகளை உள்ளடக்கி நிறைவுற்றது. ஆரம்பம் முதல் இறுதி வரை அதன் சிறப்பு என்னவென்றால், ஆஸ்ற்றலியாவரலாற்றில் இதுவரை காணாத அளவிற்கு மக்கள் திரளாக வந்திருந்தனர்.
இந்தத்திருப்பலியானது, ஆஸ்திரேலியா வரலாற்றில் சிறந்த மற்றும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இத்திருப்பளியில் 26 கர்தினால்களும், 420 ஆயர்களும், ஆயிரத்திற்கும் மேலான குருக்கள் மற்றும் துறவற சபையினரும் கலந்துகொண்டனர்.
மற்றுமொரு வியத்தகு சம்பவம் என்னவென்றால், இந்நிகழ்ச்சியில் 24 உறுதி பூசுதல் வழங்கப்பட்டது. இதில், 14 ஆஸ்திரேலியர்கள் மற்றும் அமெரிக்காவிலிருந்து யுவான் மர்த்தினசும் அடங்குவர். மேலும், 1300 குருக்கள் மற்றும் சகோதரர்கள் கலந்து கொண்ட இத்திருப்பளியின்போது இயேசுவின் திருவுடல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

No comments: