Monday, July 28, 2008

உங்கள் தராசு

சலேசிய துறவிகளின் சேவை , இளைஞ்ர் மற்றும் சேரி வாழ் மக்களின் மருவாழ்வுக்கு அற்பனிக்கப்பட்டது. நாங்கள் முத்துக்குளி துறைமுகத்தை சேர்தவர்கள். எங்கள் ஊரில் எல்லா இளைன்யர்களும் சூதாட்டம், சினிமா குடிப்பழக்கம், தவறான பாலுறவு தொடர்பு என்று காட்டுமிராண்டித்தனம் வாழ்ந்து வருகிறோம் நாங்கள் எங்கள் ஊரில் உங்கள் சபையை நிறுவி செவைசெய்யவும், ஆண்டுதோறும் உங்கள் சபைக்கு இளைன்யர் இளம் பெண்களை தேர்வு செய்யவும் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு மாதமும் சலேசியன் இதழைப்படிக்க ஆவலாக உள்ளது.

வலன்
மணப்பாடு, தூத்துக்குடி

ஜூலை இதழில் இடம் பெற்ற முத்து அவர்கள் எழுதிய "எண்ணம் போல் வாழ்வு" நம் எண்ணங்கள் எப்போதும் உயர்ந்த எண்ணங்களாக இருக்கவேண்டும் என்ற கருத்தை வாசகர்களுக்கு எடுத்துக்காட்டியது. ஓராண்டு இவ்விதழின் ஆசிரியராக பணியாற்றி பாராட்டுக்கள் பெற்ற அருட்திரு செல்வநாதன் அடிகளாருக்கு எனது பாராட்டுக்கள். அவர் பெயர் வாசகர் மத்தியில் நிலைத்திருக்கும் என்பதில் ஐய்யமில்லை. புதிய ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்.

சேவியர் கோம்ஸ்
தூத்துக்குடி

No comments: